கொட்டும் மழையில் உண்ணாவிரதம் இருக்கும் சசிபெருமாள் குடும்பம் - இன்று 4வது நாள்!
சேலம்: மதுவிற்கு எதிரான போரட்டத்தின் போதே உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளின் குடும்பத்தினர் நேற்று 3வது நாளாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடையில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சசிபெருமாள் உடலை வாங்க ஆசாரிபள்ளம் சென்ற அவரது மனைவி மற்றும் மகன், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால்தான் உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறிவிட்டனர். அவர்களுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
இதனிடையே, சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இ. மேட்டுக்காடு கிராமத்தில் சசிபெருமாளின் மனைவி மகிலம், மகள் கவியரசி, மகன்கள் விவேக், நவநீதன் மற்றும் ஊர் மக்கள் கொட்டும் மழையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்கள் அனைவரும் இன்றும் 4வது நாளாக தங்களது போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர். மேலும், தமிழக அரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் இன்று தங்களுடைய கண்களைக் கட்டிக் கொண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சசிபெருமாளது மகன் விவேக்கின் உடல்நிலை தொடர்ந்து உண்ணாவிரதத்தால் மோசமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications