சிறையில் தவ வாழ்வு வாழ்ந்து வருகிறாராம் சின்னம்மா! சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
சிறையில் சசிகலா தவ வாழ்வு வாழ்ந்து வருவதாக தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை: சிறையில் சசிகலா தவ வாழ்வு வாழ்ந்து வருவதாக தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா எளிய உணவை தான் சிறையில் உட்கொண்டு வருகிறார் என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்பட்ட சிறப்பு வசதிகள் டெல்லி வரை எதிரொலித்துள்ளது. சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகை ரகசியங்கள் வெளியானதால் தமிழக, கர்நாடக அரசியல் அல்லோகளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் பெங்களூரு சிறையில் சசிகலா தவ வாழ்வு மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் சிறையில் எளிய உணவுதான் உட்கொண்டு வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக எழுந்துள்ள புகாரையும் நாஞ்சில் சம்பத் மறுத்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக கருத்துக்கூறிய நாஞ்சில் சம்பத் அடுத்த சில நாட்களிலேயே அவர்களுக்கு ஆதரவாக மாறி கருத்துக்களை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.