ராம மோகன் ராவை கைது செய்ய சசிகலா புஷ்பா வலியுறுத்தல் !
ராம மோகன் ராவை கைது செய்ய வேண்டும் என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: வருமான வரித்துறையினர் தம்முடைய வீட்டில் சோதனை நடத்தியது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் ராம மோகன் ராவ் விளக்கம் அளித்தார். அப்போது தாம் வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாகவும், துப்பாக்கி முனையில் தம்முடைய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
ராமமோகன ராவ் பேட்டி குறித்து அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா கருத்து தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர்கள் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழவேண்டிய கட்டாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகள் ஒப்பந்தங்கள் ராவ் மகனுக்கு கொடுத்தது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பிய அவர் மற்ற அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக தலைமைச் செயலாளர் செயல்படவேண்டும் என்றும் கூறினார். ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் இதுபோல அதிகாரிகள் தலைமை செயலகத்திற்கு வந்து சோதனை நடத்துவார்களா? என்று ராம மோகன் ராவ் கேட்கிறார்.
ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல அதிகாரிகள் ஊழலில் ஈடுபட முடியுமா? ராம மோகன் ராவை உடனடியாக கைது செய்ய வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ராம மோகன் ராவ் பேசி வருகிறார். இவர் சேகர் ரெட்டிக்கு நெருக்கமானவர், சசிகலா நடராஜனின் பினாமி என்றும் கூறினார் சசிகலா புஷ்பா. ஓ.பி.எஸ் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் எம்.பி சசிகலா புஷ்பா கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications