பிடியில் இருந்து நழுவிய சசிகலா புஷ்பா.... கவலையில் திமுக பெண் வாரிசு

சசிகலா புஷ்பா தங்களின் பிடியில் இருந்து நழுவி பா.ஜ.க பக்கம் தாவி விட்டதால் திமுக பெண் வாரிசு கவலையில் ஆழ்ந்துள்ளாராம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா புஷ்பா சாட்டையை சுழற்றிய சூழலில், அவரை தங்கள் பக்கம் இழுத்தது திமுக. இதற்கான அசைன்மெண்ட்டை கவனித்தது பெண் வாரிசு. இப்போது தங்களின் பிடியிலிருந்து சசிகலாபுஷ்பாவிலகிவிட்டதாக நினைக்கிறதாம் திமுகவின் பெண் வாரிசு.

புஷ்பாவும் , வாரிசும் ஏற்கனவே நல்ல நட்பில் இருந்ததால் திமுகவிடம் எளிதாக சிக்கியிருந்தார் புஷ்பா. இவரை திமுக வளைத்துவிட்டதையறிந்த பா.ஜ.க.தலைமை, தம் பக்கம் இழுத்து தமிழக அரசியலில் விளையாட நினைத்தது. அதற்காக, திமுக பிடியிலிருந்து அவரை விலக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Sasikala pushpa cold war with Kanimozhi

சசிகலா புஷ்பாவுக்கு எதிராக அதிமுக அரசு வழக்குப் போட , அதில் சிக்காமல் அவருக்கு பாதுகாப்பு அளித்து காப்பாற்றியது மத்திய அரசு. அதே சமயம், பா.ஜ.க.தலைவர்களும் அவரிடம் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தினர்.

மத்திய உளவுத்துறையினரை வைத்து, ஜெயலலிதாவை முன்னிறுத்தி அரசியல் செய்துவரும் சசிகலாவுக்கு எதிரான அதிரடிகளை செய்ய புஷ்பாவை பயன்படுத்தியது பா.ஜக.! இப்ப்படி பா.ஜக.வின் பிடிக்குள் முழுமையாக சென்றுவிட்டார் புஷ்பா. இதனால்தான் தங்களை விட்டு தூரமாக சென்றுவிட்டாரே புஷ்பா என நினைகிறதாம் பெண் வாரிசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+