மீண்டும் அக்கப்போர்.. பணிப் பெண்ணை மர்ம நபர்கள் மிரட்டுவதாக போலீசில் சசிகலா புஷ்பா புகார்
தமது வீட்டு பணிப்பெண்ணை மர்ம நபர்கல் போனில் மிரட்டுவதாக அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமது வீட்டு பணிப் பெண்ணை மர்ம நபர்கள் போனில் மிரட்டுவதாக போலீசில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா திடீரென புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்த 2 பெண்கள் அவரது குடும்பத்தினர் மீது ஏடாகூட புகார்களை கூறியதாக கடந்த ஆண்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அரசியல்வாதிகள் நெருக்கடியால் தாங்கள் அப்படி கூறியதாக அந்த பெண்கள் பல்டி அடித்தனர்.

அமைதியான சசிகலா புஷ்பா
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. அதன்பின்னர் ஊடகங்களில் சசிகலா புஷ்பாவின் பெயர் அடிபடாமல் இருந்தது.

பரபரப்பான சந்திப்பு
இந்நிலையில் திங்கள்கிழமையன்று திடீரென்று தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சசிகலா புஷ்பா. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆச்சரிய அதிமுக
கடந்த 2 ஆண்டுகாலமாக சசிகலா குடும்பத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் சசிகலா புஷ்பா. ஆனால் இந்த கடும் எதிர்ப்பைக் கைவிட்டு தினகரனின் தலைமையை சசிகலா புஷ்பா ஏற்றது அதிமுகவினரை ஆச்சரியப்பட வைத்தது.

போலீஸ் விசாரணை
இதனிடையே சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சசிகலா புஷ்பா ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தமது வீட்டு பணிப் பெண்ணை மர்ம நபர்கள் தொலைபேசியில் மிரட்டுவதாக கூறியுள்ளார். ஆனால் இந்த பணிப் பெண் யார்? எதற்காக அவர் மிரட்டப்படுகிறார்கள்? என்கிற விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்த புகாரை தற்போது தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications