முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் தாக்கல் செய்த மனு... முடித்து வைத்தது ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று முடித்து வைத்து தள்ளுபடி செய்தது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப். இவர்கள் தங்களுக்கு முன்ஜாமின் கேட்டு கடந்த வியாழக்கிழமை சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தனர்.

Sasikala pushpa's husband, son anticipatory bail, case end up

சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில், பெயர் தெரியாத நபர் ஒருவர் தங்களுக்கு எதிராக 3 புகார்கள் கொடுத்திருப்பதாகவும், இந்த புகாரில் தங்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வைத்திநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

காவல்துறை தரப்பில், இவர்கள் இரண்டு பேர் மீதும் எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்று பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைப்பதாக கூறி சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+