Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் பள்ளி நிர்வாகிகளிடையே மோதல்.. மாணவர்களை உள்ளே வைத்து பூட்டுப் போட்டதால் பரபரப்பு!

தேனியில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களை உள்ளே வைத்து ஒரு தரப்பினர் பூட்டுப்போட்டதால் பதற்றம் நிலவியது.

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் மாணவர்களை உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகிகளுக்கு இடையே பள்ளியை நிர்வகிப்பது தொடர்பாக மோதல் வெடித்துள்ளது.

School locked by the administrators when students were inside in Theni

இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் பள்ளிக்குப் பூட்டுப்போட்டு அடாவடியில் ஈடுபட்டனர். மாணவர்கள் உள்ளே வைத்து பூட்டப்பட்டதால் அச்சமடைந்த மாணவர்கள் கூச்சலிட்டனர்.

இந்த தகவல் காட்டுத்தீப்போல் பரவியதால் மாணவர்களின் பெற்றோர்கள் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+