புயல் அச்சுறுத்தல்.. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிப்பு

நாடா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடா புயல் எதிரொலியாக தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் புதுவை, காரைக்காலில் டிசம்பர் 1, 2 ஆகிய இரு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விட அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நாடா புயல் வெள்ளிக்கிழமை கடலூர் அருகே கரையைக் கடக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

schools leave due to Cyclone NADA

இதனால் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அறிவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறியதாவது: நாடா புயல் எதிரொலியாக தமிழகத்தில் டிசம்பர் 1, 2 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இதனிடையே கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+