காரைக்குடியில் அறிவியல் கண்காட்சி.. மாணவர்கள் வைத்த கலக்கல் படைப்புகள்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி காரைக்குடி மு.வி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 12.08.2016 அன்று நடைபெற்றது.
பள்ளி அளவில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றன. கண்காட்சி துவக்கவிழாவிற்கு தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து அவர்கள் தலைமை வகித்தார். மு.வி. அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
அழகப்பா பல்கலைக்கழகத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர். அன்பழகன் அவர்கள் அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியர்கள் முனைவர்.ஆ. ராம்நாத், முனைவர். கே. கோவிந்தராஜன், முனைவர். என் சசிகுமார் மற்றும் அழகப்பா கலைக்கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர்கள் முனைவர். இளங்கோவன், முனைவர். ஜான் ரத்தினம், முனைவர். செந்தில்குமார் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினார்கள்.
இக்கண்காட்சியில் 6 முதல் 8 ம் வகுப்பிற்கான பிரிவில் 44 மாணவர்களும், 9 முதல் 10ம் வகுப்பிற்கான பிரிவில் 66 மாணவர்களும், 11 முதல் 12 ம் வகுப்பிற்கான பிரிவில் 26 மாணவர்களும் சுமார் 136 மாணவர்கள் பங்குபெற்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் வருவாய் மாவட்ட அளவில் இம்மாத இறுதியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இராமநாதன் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் தலைமையாசிரியர்கள் சண்முகவேல் முருகன், எம். இராஜேந்திரன், எஸ். மாரிமுத்து, இந்திரா காந்தி, பீட்டர் லெமாயு மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சரவணன், சேவியர், இராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கனகராஜ் அவர்கள் நன்றி கூறினார்.