கரூர், திருச்சி, சேலம், மதுரையில் அட்டகாச "சதம்" போட்டு.... வெயில் அபார ஆட்டம்!
சென்னை: தமிழகத்தின் பல ஊர்களிலும் வெயில் தனது கோர தாண்டவத்தை ஆரம்பித்து விட்டது. பல ஊர்களில் வெயில் இப்போதே சதம் போட ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் வெயில் அதிகமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேலம், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. நெல்லை மாவட்டத்திலும் வெயில் அதிகமாக உள்ளது. மதுரை பக்கம் தலை காட்ட முடியாத நிலை. வெயில் வெளுக்கிறதாம்.
நேற்று தமிழகத்திலேயே அதிக அளவாக கரூரில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. திருச்சியில் 100, சேலம் 100, மதுரை 101, பாளையங்கோட்டை 100 என வெயில் சதம் அடித்தது.
சென்னையில் மீனம்பாக்கத்தில் 94 டிகிரி பாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவானது. சென்னையில் வெயில் அதிகமாக இருந்தாலும் காற்றும் அடித்து வருகிறது.
இன்று முற்பகல் 11.30 மணி நிலவரப்படி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெயில் நிலைமை:
சென்னை நுங்கம்பாக்கம் - 91, மீனம்பாக்கம் 91, மதுரை 91, கோவை 90, சேலம் 88, திருச்சி 93, நெல்லை 90, கரூர் 90.












Click it and Unblock the Notifications