கன்னியாகுமரி: கடல்சீற்றத்தால் 18 கிராமங்கள் பாதிப்பு-ராட்சஅலையில் தரைமட்டமான வீடுகள் -மக்கள் பீதி
கன்னியாகுமரி கடல் சீற்றம் காரணமாக வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.
கன்னியாகுமரி: குமரிமாவட்டத்தில் 18 கிராமங்களில் 2-வது நாளாக இன்று கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு மேல் கடல் அலை வீசி வருவதுடன், 150-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விடிய விடிய மீனவ மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டினம், நீரோடி, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலலை வேகம் காரணமாக நேற்று நவஜீவன்காலணி பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்துகொண்டு வெளியே ஓடிவந்தனர்.

அதேபோல, வள்ளவிளை கரையோர பகுதியில் சில வீடுகளில் கடல் அலைகள் வீட்டுக்குள்ளும் புகுந்துவிட்டதால் மீனவ மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். இதனால் அவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க அரசு சார்பில் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன
மேலும் கொட்டில்பாடு, ராஜக்கமங்கலம் போன்ற பகுதிகளில் கடலலை 10 அடி முதல் 15 அடி உயரத்திற்கு மேல் காணப்பட்டது. கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் கடல் சீற்றம் காரணமாக 3 வீடுகள் இடிந்துவிழுந்த நிலையில், தற்போதுவரை அங்கு அலையின் வேகம் குறையால் அப்பகுதி முழுவதும் தண்ணீர்சூழ்ந்து காணப்படுகிறது.

மாவட்டத்தின் கடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லமுடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேங்காய்பட்டினம், இரயுமன் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 படகுகளை கடலலை இழுத்துசென்றுவிட்டதால் அது மீனவர்களுக்கு கூடுதல் கவலையை அளித்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications