39 காட்டேஜ்களுக்கும் சீல் வைக்கும் பணி ஆரம்பம்.. நீலகிரி கலெக்டர் அதிரடி
காட்டேஜ்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஊட்டி: உச்சநீதிமன்ற உத்தரவிட்டபடி, நீலகிரியில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ரிசார்ட்களுக்கு சீல் வைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மசினகுடி, உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாடும் பகுதிகளில் ரிசார்ட்களை கட்டி விட்டுள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், யானைகள் வழித்தடத்தில் உள்ள விடுதிகளை கணக்கெடுத்து சீல் வைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சில உத்தரவிட்டிருந்தனர்.

நோட்டீஸ் ஒப்பட்டப்பட்டது
அதன்படி அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நேரடியாக சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சென்று விசாரணை நடத்தினார். அத்துடன் உடைமைகளை எடுத்து கொண்டு காட்டேஜ்களை விட்டு வெளியே ஒருநாள் நேரம் கொடுத்தார். மேலும் கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்து, தற்போது யானைகள் வழி தடத்தில் உள்ள 39 காட்டேஜ்கள், விடுதிகள், கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது.

சீல் வைக்கும் பணி ஆரம்பம்
மசினகுடி அருகே உள்ள கரடிமலையில் டேவிட் பிலிப்ஸ் என்பவருக்கு சொந்தமான தேரா மவுன்ட் என்ற ரிசார்ட்டில் முதல் சீல் வைக்கப்பட்டு, பிறகு ஒவ்வொரு காட்டேஜுக்கும் சீல் வைக்கும் பணி நடைபெறும். இன்று மாலைக்குள் முறைகேடாக கட்டப்பட்டுள்ள காட்டேஜ்களுக்கும் அனைத்துக்கும் சீல் வைக்கப்பட்டுவிடும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் கூறப்படுகிறது.

கூட்டம் கூட்டமாக வாழும்
இந்த நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். அத்துடன் இன்று சர்வதேச யானைகள் தினம் வேறு. யானை ஒரு பாரம்பரிய உயிரினம் என்பதை உச்சநீதிமன்றம் அவ்வப்போது தெளிவுபடுத்தி வருவதுடன், அதற்கு முக்கியத்துவம் அளித்து இதுபோன்ற அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்து வருவது பாராட்டுக்குரியதாக உள்ளது. பொதுவாக யானைகள் தனியாக வாழக்கூடியவை அல்ல. எப்போதுமே கூட்டம் கூட்டமாகவே அவை வாழ்ந்து பழக்கப்பட்டவை.

மனிதாபிமானம் அவசியம்
யானைகள் நடமாடும், வாழும், இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் என வனத்துறை பகிரங்கமாக அறிவித்தும், சிலர் பணத்திற்காக சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டி செயல்படுவதை இனியாவது நிறுத்த வேண்டும். மனித இனம் போன்றே மற்ற உயிரினங்களும் இப் பூவுலகில் வாழ்வதற்கு வரம் பெற்றுள்ளன என்பதனை, கோலோச்சும் பணத்தாசை பிடித்தவர்களும், மனிதாபிமானமற்றவர்களும் வருங்காலத்தில் நினைத்து பார்ப்பது அவசியம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications