தேவர் ஜெயந்தி.. சிவகங்கையில் இன்று முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் அக்.23ம் தேதி முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் மருது சகோதரர்களின் குருபூஜை அனுசரிக்கப்படவுள்ளது. அதேபோல், வருகிற 30-ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், தேவர் குருபூஜை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
இன்று (அக்.23-ம் தேதி) முதல் அக்.31-ம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications