'கொபசெ' சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகனுக்கு எதிராக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியை தொடங்கிய நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். அண்மையில் கொத்து கொத்தாக, நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறி பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியில் தற்போது சீமானுக்கு பக்க பலமாக இருப்பவர்களில் முக்கியமான நபர் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன். பொதுமேடைப் பேச்சுகளால் வழக்குகள் தொடரப்பட்டு சிறைக்கு சென்றவர் சாட்டை துரைமுருகன். திரைப்பட நடிகை மற்றும் சீமான் தொடர்பான விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தியவராகவும் கூறப்பட்டவர் சாட்டை துரைமுருகன்.
இந்த நிலையில் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக இன்று சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், துரைமுருகன் நடத்தும் சாட்டை யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை; அதில் வருகிற கருத்துகள்-செய்திகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்; அவற்றுக்கு நாம் தமிழர் கட்சி எந்த வகையிலும் பொறுப்பாகாது என சீமான் தெரிவித்துள்ளார்.
|
🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/IqIzAesOmS
— Duraimurugan (@Saattaidurai) April 15, 2025
நித்தியானந்தா? நயினார் நாகேந்திரன்? மோதல் என்ன?
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்களில் விசாரித்த போது, தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் நயினார் நாகேந்திரன், இஸ்லாமியருக்கு எதிரான சங்கி எல்லாம் இல்லை என்பது உள்ளிட்ட கருத்துகளை சாட்டை துரைமுருகன் பேசியிருந்தார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி, பாஜகவின் பி டீம் என விமர்சிக்கப்படும் நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பொதுவெளியில் பகிரங்கமாக பாராட்டி நற்சான்று கொடுத்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்தே சாட்டை துரைமுருகன் தொடர்பாக சீமான் அறிக்கை வெளியிட்டார் என்கின்றனர்.

மேலும், பல்வேறு பலாத்கார வழக்குகளில் தேடப்படுகிற பாலியல் குற்றவாளியான சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவிடம் சாட்டை துரைமுருகன் பேட்டி எடுத்து ஒளிபரப்ப இருந்ததும் சீமானின் அறிக்கைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம்












Click it and Unblock the Notifications