ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.. நாம் தமிழர் வேட்பாளருக்காக சீமான் வாக்கு சேகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவர் ஏற்கனவே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது கட்சி வேட்பாளருக்காக வாக்கு சேகரித்தார்.

தொகுதியின் 38வது வட்டத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டறிக்கைகளை கொடுத்து, செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் சீமான்.
#நாம்தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்! நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்! #இரட்டைமெழுகுவர்த்தி pic.twitter.com/bWwLBwzTdW
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) April 1, 2017
அவருடன், கட்சி வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications