தமிழ்நாட்டுக்கு தண்ணீர் இல்லையா.. கர்நாடகத்துக்கு நெய்வேலி கரண்ட் கிடையாது.. சீறும் சீமான்

தண்ணீர் தராத கர்நாடகத்துக்கு நெய்வேலியில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்று சீமான் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

கடலூர்: தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலியில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காவிரி நதி நீர் பங்கீட்டுக்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசம் கோரியது.

Seeman says that We should stop the current giving to Karnataka

மேலும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்கள் இருப்பதால் வரைவு அறிக்கைக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியவில்லை என்றும் மத்திய அரசு சாக்கு போக்கு கூறியது. பின்னர் தமிழகத்துக்கு மே மாதத்துக்குள் 4 டிஎம்சி தண்ணீரை விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

எனினும் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதற்கு தமிழக விவசாயிகள் கொந்தளித்துவிட்டனர்.

'நீட்' தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் 'தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு' சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன உரையாற்றினார்.

அப்போது சீமான் கூறுகையில் தண்ணீர் திறக்க முடியாது என கூறும் கர்நாடகத்துக்கு நெய்வேலியில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும். தமிழர்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+