தமிழக மக்களை மடையர்களாக ரஜினிகாந்த் கருதுகிறார்.. சீமான் சீற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மக்களை மடையர்களாக ரஜினிகாந்த் கருதுகிறார் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னை கிண்டி, காந்தி மண்டபத்தில் காமராஜர் நினைவு தினத்தையொட்டி, அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சீமான். இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய சீமானிடம், பிறந்த நாள் அன்று கட்சி துவங்குவதாக ரஜினிகாந்த் கூறியுள்ள நிலையில் வெளிநாடுகளில் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Seeman slam actor Rajinikanth for his political stunts

இதனால் கோபமடைந்த, சீமான் கூறியதாவது: ரஜினிக்கு அதில் ஒரு பொழுதுபோக்கு. மோசஸ், நபிகள் நாயகம் மாதிரி திடீரென 10 கட்டளைகள் வெளியிடுவார். நீங்களும் (ஊடகங்களும்) பெரிதாக பேசுவீர்கள்.

தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்கு மடையர்கள் என்று இவர் கருதுகிறார் என்பதை அறிவார்ந்த தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். கனவு வந்தால் காலையில் ஒரு அறிக்கை, நினைத்தால் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடுவார்.

ஆரம்பியுங்கள், வாருங்கள்.. ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன என்று தெரியவில்லை. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

"முதலாளிகளுக்காகவே அரசுகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் இருந்து எடுத்தால் தான் தாமிரப் பற்றாக்குறை தீருமா?" என்று ஸ்டெர்லைட் தொடர்பான கேள்வியொன்றுக்கு சீமான் பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+