ஹைட்ரோ கார்பனை குஜராத்தில் எடுக்க வேண்டியதுதானே.. சீமான் சுளீர்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை குஜராத் மற்றும் கங்கைக்கரையோரம் மோடி அரசு செயல்படுத்த வேண்டியதுதானே என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எது வேண்டுமோ அதனை குஜராத் மாநிலத்திலோ கங்கைக்கரையிலோ மோடி அரசு எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என கூறி இயற்கை அன்னையின் ஈரக்குலையை நாசமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி தோண்டியுள்ள ஆழ்குழாய் கிணறுகளால் அந்த பகுதியின் நிலத்தடி நீராதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது. அப்பகுதி தண்ணீர் அமிலமாக மாறி வருகிறது.












Click it and Unblock the Notifications