செல்பி மோகம்: கெலவரப்பள்ளி அணையில் விழுந்து 2 பேர் பலி.. காப்பாற்ற முயன்ற கல்லூரி மாணவரும் மரணம்!

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் தவறி விழுந்து 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் தவறி விழுந்து 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையால் தமிழக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக பெரும்பாலான அணைகள் மளமளவென நிரம்பின. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையும் நிரம்பியுள்ளது.

தவறி விழுந்த இளைஞர்

தவறி விழுந்த இளைஞர்

இந்நிலையில் கெலவரப்பள்ளி அணையில் வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் செல்பி எடுத்தனர். அப்போது ஒரு இளைஞர் தவறி அணையில் விழுந்தார்.

2 பேர் பலி

2 பேர் பலி

இதனைக்கண்ட அங்கிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் அணையில் விழுந்தவரை காப்பாற்ற தானும் அணையில் குதித்தார். இதில் 2 பேரும் உயிரிழந்தனர்.

2 பேர் தப்பியோட்டம்

2 பேர் தப்பியோட்டம்

செல்பி எடுத்தப்போது உடனிருந்த மற்ற 2 பேரும் தப்பியோடிவிட்டனர். அவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பலியான 4 வயது சிறுவன்

பலியான 4 வயது சிறுவன்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் காவிரியாற்று பாலத்தில் தந்தை செல்பி எடுத்த போது 4 வயது சிறுவன் ஆற்றில் விழுந்து உயிரிழந்தான். இந்நிலையில் கெலவரப்பள்ளி அணையில் செல்பி எடுத்து 2 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

சோகம்

சோகம்

மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அணைகள் மற்றும் ஆற்று ஓரங்களில் செல்பி எடுக்க தடைவிதித்துள்ளனர். ஆனால் அவற்றையெல்லாம் கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் செல்பி மோகத்தால் உயிரை மாய்த்துக்கொள்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+