ஜிஎஸ்டி வரியை இப்பவே கொண்டு வந்தா அக்கப்போரு தான் வரும்- சொல்கிறார் பொர்க்கி புகழ் சு.சுவாமி
ஜிஎஸ்டி வரியை இந்த ஆண்டே அமல்படுத்துவதன் மூலம் பேரடி விழும் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்ரமணியன் சாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜிஎஸ்டி வரியை ஜூலை 1 முதல் விதிப்பதால் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்ரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே வரி விதிப்பதற்கான ஜிஎஸ்டி முறை ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்தும் தேதியில் எந்த மாற்றமுமில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார்.

சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்துவதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. கடந்த சனிக்கிழமை தங்கம், ஜவுளி, காலணி, பிஸ்கட்ஸ், மற்றும் பீடி உள்ளிட்ட ஆறு பொருட்களின் வரி விகிதங்கள் முடிவு செய்யப்பட்டன.
பாஜக ஆளும் மாநில சட்டசபைகளில் ஏற்கனவே ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டு விட்டன. இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாரும் விரைவில் ஜிஎஸ்டி மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றார்.
அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக வரியும், பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பக்கம் மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவது குறித்த பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்ரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
GST roll out be on July 1 but of 2019.A huge risk if implemented before 2019 given the state of preparedness. It could become our Waterloo.
— Subramanian Swamy (@Swamy39) June 5, 2017
அதில், ஜிஎஸ்டியை ஜூலை 1 முதல் அமல்படுத்தலாம் ஆனால் இப்போதல்ல 2019ல் என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இந்த ஆண்டு முதலே அமல்படுத்தினால் மாநிலங்கள் பாதிக்கப்படும். ஜிஎஸ்டி வரிக்கு ஏற்ப மாநிலங்கள் தயாராகவில்லை, இந்த நிலையில் ஒரே நாடு ஒரே விதி முறையை அமல்படுத்தினால் மாநிங்களில் அக்கப்போரு தான் வரும் என்றும் அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஒரு பக்கம் ஜிஎஸ்டி வரியால் நாடு முன்னேறும் என்று பாஜக கூறும் நிலையில், அந்தக் கட்சியின் சுப்ரமணியன் சுவாமியே இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications