செங்கோட்டை- ஆரியங்காவு அகல ரயில் பாதை திறப்பு .. அமைச்சர் புறக்கணிப்பு
செங்கோட்டை- ஆரியங்காவு அகல ரயில் பாதை திறப்பு விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கோட்டை: செங்கோட்டை- ஆரியங்காவு அகல ரயில் பாதை திறப்பு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கோட்டை-புனலூர் இடையே 49.5 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 6 ஆண்டுகாலமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக இம்மார்க்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அகல ரயில்பாதைஅமைக்கும் பணிகள் வேகமெடுத்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன.

இந்த பணிகள் வரும் பிப்ரவரி மாதத்தில் முடிவடைந்து மார்ச் மாதத்தில் ரயில்கள் இந்த வழி யாக ஓட துவங்கும் என ரயில்வே துறையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் செங்கோட்டை முதல் நியூ ஆரியங்காவு வரை 20.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகல ரயில் பாதையில் கடந்த 24 முதல் 26-ஆம் தேதி வரை செங்கோட்டை- நியூ ஆரியங்காவு வழித்தடத்தில் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகரன்ஆய்வு நடத்தி ரயிலை இயக்க அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக செங்கோட்டை முதல் நியூ ஆரியங்காவு இடையே அகல ரயில் பாதை இன்று திறந்துவைக்கப்பட்டது.இதனை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு திறந்துவைத்தார்.

செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கார்க் , தலைமை கட்டுமானபிரிவு பொறியாளர் கொல்லம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன், தென்காசி வசந்தி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர்,செங்கோட்டை ரயில்பயணிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தத நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் அதிமுக எம்.எல்.ஏவும்,அமைச்சருமான ராஜலட்சுமி கலந்து கொள்ளவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது. அதேபோல இந்த மார்க்கத்தில் ரயிலை இயக்காமல் பாதையை மட்டும் திறந்து வைத்ததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications