அவரை சேர்த்துக்கிட்டா மக்கள் காரி துப்புவாங்க - சொன்னது நிதி
கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நினைப்பவரை சேர்த்துக்கிட்டா மக்கள் காரி துப்புவார்கள் என்று நிதியான அமைச்சர் கூறியதாக கிரீன்வேஸ் சாலை பக்கம் கிசுகிசுக்கிறார்கள்.
சென்னை: ஜெயிலுக்கு போயிட்டு வந்ததுக்குப் பிறகு அவரின் ஆட்டம் அதிகரித்து விட்டது என்பது அமைச்சரவையில் இருப்பவர்களின் புகார். எங்கே நம்மை ஓரங்கட்டி விடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள் சில அமைச்சர்கள். எனவேதான் அவரை கட்சியில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஆட்சியிலும், கட்சியிலும் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவங்க யாரையும் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று சொன்னதன் பிறகே தொகுதியில் அமைச்சர்களுக்கு மரியாதையே கிடைத்துள்ளது. இதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர்கள் நினைக்கிறார்கள்.

மணியான அமைச்சர்களோ அவரை சேர்த்துக்கொள்ளவே கூடாது என்று கூறி வருகின்றனர். மணியான அமைச்சருக்கு அதிகம் சப்போர்ட் செய்வது நிதியான அமைச்சர்தானாம்.
எல்லோரும் கூடி கூடி பேசினாலும் அமைச்சர்கள் ஆலோசனை எல்லாம் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவரை சேர்த்துக்கொள்ளவே கூடாது என்பதுதானாம்.
அவரை போய் சந்தித்து விட்டு வந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் மணியான அமைச்சர்களிடம் பேசிய நிதியான அமைச்சர், என்ன நடந்தாலும் சரி மறுபடியும் அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள கட்சி போயிடக்கூடாது. அவரை மட்டும் சேர்த்துக்கிட்டோம்னா கட்சிக்காரங்க மட்டுமில்லாம மக்களும் நம்ம முகத்துல காரி துப்புவாங்க என்று கூறினாராம். அதை அனைவருமே ஆமோதித்தார்களாம்.
இவங்க பேசிக்கிறதை பார்த்தா கட்சி மறுபடியும் சில்லு சில்லா சிதறிடும் போல இருக்கே!
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications