பீப் பாடல் விவகாரம்- சென்னையில் சிம்புவிற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய ரசிகர்கள்
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் கடும் கண்டனங்களை சந்தித்து வருகின்ற நடிகர் சிம்புவிற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களை இழிவு படுத்தும் வகையிலான வார்த்தைகளைக் கொண்டுள்ளதாக பீப் பாடலுக்கும், நடிகர் சிம்புவிற்கும் எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
பிரச்சினைகளை திசை திருப்ப சிம்பு என்ற தனிமனிதன் தாக்கப்படுவதாகவும், இதற்கு முன்னரும் இது போன்ற பாடல்கள் வந்துள்ளதாகவும் அவரது ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications