சிவாஜி கணேசன் சிலையை அகற்ற ஒர் ஆண்டு அவகாசம்: சென்னை உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை தமிழக அரசு ஒரு ஆண்டுக்குள் அகற்றிவிடுவதாகக் கூறியதால், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு ஆண்டு அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அதனை அகற்றக் கோரி சீனிவாசன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

sivaji staue removal case adjourned

இந்த வழக்கின் விசாரணையின் போது, நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்டுவதற்காக பல்வேறு துறைகளுடன் தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. தற்போது காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டு, தமிழக அரசு கட்டப்போகும் அந்த மணிமண்டபத்தில் வைக்கப்படும். அதனை கட்ட ஒரு ஆண்டுகள் ஆகும் என்பதால், ஒரு ஆண்டுக்குள் சிவாஜி சிலையை அகற்றிவிடுவதாக தமிழக அரசு இன்று பதில் அளித்தது.

இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ஒரு வருடத்தில் சிலை அகற்றப்படும் என்பதால், ஓராண்டு கால அவகாசம் அளித்து உத்தர விட்டது.வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+