ஆர்.கே. நகரில் சரத்குமாரின் சமக வேட்பாளர் மனு நிராகரிப்பு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த சரத்குமார் கட்சி வேட்பாளர் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மாற்று
வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் சரத்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவினால் ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களை கடந்த 16அம் தேதி முதல் 23ஆம் தேதி வரை
127 வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர்.
அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் கொடி, சின்னம் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது. சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன், 'தொப்பி' சின்னத்திலும்
பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், 'மின்கம்பம்' சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
சமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அந்தோணி சேவியரை வேட்பாளராக சரத்குமார் அறிவித்தார். இந்த முடிவு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டதாகக் கட்சியினர் தெரிவித்தனர்.

தனித்து போட்டி
சமத்துவ மக்கள் கட்சி தொடங்கிய சரத்குமார் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். தொன்காசி தொகுதியில் வெற்றி பெற்று
எம்எல்ஏவானார். கடந்த 2016 ஆம் சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக கூறினார். மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்தார். திருச்செந்தூரில் இரட்டை இலை சின்னத்தில்
போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஓபிஎஸ் ஆதரவு
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்டது. உடனடியாக ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் சரத்குமார். அதே வேகத்தில் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது சமக சார்பில் வேட்பாளரை அறிவித்தார் சரத்குமார்.

வேட்புமனு தாக்கல்
வடசென்னையில் மக்கள் மத்தியில் நன்றாக அறிமுகமான மாநில துணைப் பொதுச்செயலாளர் அந்தோணி சேவியரை நிறுத்தலாம் என்று கட்சியினர் தெரிவித்தனர். அதன்படி,
அந்தோணி சேவியர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடைசி நாளான நேற்று அந்தோணி சேவியர் வேட்பு மனுவை தாக்கல்செய்தார்.

வலிமையை நிரூபிப்போம்
தனித்து போட்டியிட்டு தங்களின் வலிமையை நிரூபிப்போம் என்று வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் பேசினார் சரத்குமார். வேட்பாளர் அந்தோணியும் நம்பிக்கையுடன் பேட்டியளித்தார். மாற்று வேட்பாளராக வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராயபுரம் கே.விஜயன் மனு தாக்கல் செய்தார்.

மனுக்கள் நிராகரிப்பு
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்ற நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்தோணி ராஜ், மாற்று வேட்பாளர் கே.விஜயன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது சரத்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications