திடீர் பழுது... திருச்சி-துபாய் ஏர் இந்தியா விமானம் சென்னையில் தரையிறக்கம்
சென்னை: திருச்சியிலிருந்து 169 பயணிகளுடன் துபாய்க்குக் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் பழுது காரணமாக அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த அத்தனை பேரும் பத்திரமாக இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

169 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் அந்த விமானம் இன்று அதிகாலையில் திருச்சியிலிருந்து துபாய்க்குக் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் பழுது ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அப்போது விமானம் சென்ற பகுதிக்கு அருகில் இருந்த சென்னை விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. தக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டதும், விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமான பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்று பிற்பகலுக்கு மேல் விமானம் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications