நெல்லை: தூங்கிய குழந்தையை எழுப்ப சூடு போட்ட அங்கன்வாடி ஊழியர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அங்கன்வாடியில் குழந்தைக்கு சூடு வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் கைது செய்யப் பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் இருக்கும் அங்கன்வாடி ஒன்றில் நேற்று மதியம் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பெண் குழந்தை ஒன்றை எழுப்புவதற்காக அங்கிருந்த அங்கன்வாடி உதவியாளர் சீதாதேவி என்பவர் சூடு வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால், வழக்கை பதிவு செய்யாத போலீசார் குழந்தையின் பெற்றோரை சமாதானம் செய்ய முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சம்பந்தப்பட்ட ஊழியர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தற்போது சீதாதேவியை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications