ரூ.30 கோடியில் சூரிய சக்தி மின் ஆலை: வஉசி துறைமுகத்துடன் ஓப்பந்தம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 5 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி செய்வதற்காக வஉசி துறைமுகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வஉசி சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகத்தில் 5 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி ஆலை நிறுவப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஓப்பந்த கையெழுத்தின்போது வஉசி சிதம்பரனார் பொறுப்பு கழக தலைவர் ஆனந்த சந்திரபோஸ், இந்திய சூரிய மின் சக்தி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஸ்வினி குமார், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய மின்சக்தி அமைச்சக செயலாளர் உபேந்திர திரிபாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த திட்டம் இந்திய சூரிய மின்சக்தி நிறுவனத்தின் மூலம் ரூ.30 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்படும். 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஆலை மூலம் வருடத்திற்கு 7.5 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கும். ஆண்டிற்கு 8025 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் குறைக்கப்படும்.
சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு செயல்படுத்தப்படும் இந்த வகை மின்சாரம் வஉசி பொறுப்பு கழக துறைமுகத்தின் உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும். வஉசி பொறுப்பு கழக நிர்வாக அலுவலகத்திற்கு 100 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்ன்சக்தி ஆலை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இதனால் வருடத்திற்கு 1.70 லட்சம் யூனிட் மினசாரம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் 400 கிலோ வாட் சூரிய மின்சார ஆலை துறைமுகத்தின் நி்ர்வாக அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட உள்ளது. இந்த தகவலை வஉசி சிதம்பரனார் துறைமுகம் பொறுப்பு கழகம் அறிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications