ஐ.டி. வளர்ச்சியால் எழுத்தும், பேச்சும் போச்சுய்யா, வெறும் தனிமை தான்யா இருக்கு: சாலமன் பாப்பையா
ஈரோடு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களிடம் தனிமை அதிகரித்துள்ளதாக பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
ஈரோடு புத்தக திருவிழாவில் கணினித் துறை வளர்ச்சியால் நிகழ்ந்துள்ள சமூக மாற்றம் வருந்ததக்கதா, வரவேற்கத்தக்கதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பட்டிமன்றத்திற்கு சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.
பட்டிமன்றத்தில் பாப்பையா கூறுகையில்,

போராட்டம்
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் வந்தபோது அதை எதிர்த்து கையெழுத்து போராட்டம் நடந்தது. ஆனால் இன்றோ லேப்டாப் கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

கம்ப்யூட்டர்
மிக்ஸி, கிரைண்டர் வருகையால் அம்மி, ஆட்டுக்கல் எல்லாம் காணாமல் போய்விட்டன. அதே போன்று கம்ப்யூட்டர் வந்தபிறகு பேப்பர் பயன்பாடு குறைந்துள்ளது.

குண்டு
கம்ப்யூட்டர் மற்றும் அது சார்ந்த சேவைகள் இல்லாமல் மனிதர்களால் இருக்க முடியாது. ஏன் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது குண்டு வீசக் கூட கம்ப்யூட்டரை பயன்படுத்தும் அவலமும் உள்ளது.

குடும்பம்
இனி கூடி மகிழ்வது குடும்பங்களில் நடக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மொழி, பண்பாட்டுக்கு மிகப்பெரிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கை
பழையன கழிதலும், புதியன புகுதலும் தவிர்க்க முடியாதது தான் என்றாலும் அது மனித வாழ்க்கையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

தனிமை
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எழுத்தும், பேச்சும் குறைந்து மனிதர்களிடம் தனிமை தான் அதிகரித்துள்ளது. இதயமும் இதயமும் பேசினால் தான் இன்பம் பெருகும் என்பதை யாரும் மறக்கக் கூடாது என்றார் பாப்பையா.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications