ஐ.டி. வளர்ச்சியால் எழுத்தும், பேச்சும் போச்சுய்யா, வெறும் தனிமை தான்யா இருக்கு: சாலமன் பாப்பையா
ஈரோடு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களிடம் தனிமை அதிகரித்துள்ளதாக பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
ஈரோடு புத்தக திருவிழாவில் கணினித் துறை வளர்ச்சியால் நிகழ்ந்துள்ள சமூக மாற்றம் வருந்ததக்கதா, வரவேற்கத்தக்கதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பட்டிமன்றத்திற்கு சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.
பட்டிமன்றத்தில் பாப்பையா கூறுகையில்,

போராட்டம்
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் வந்தபோது அதை எதிர்த்து கையெழுத்து போராட்டம் நடந்தது. ஆனால் இன்றோ லேப்டாப் கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

கம்ப்யூட்டர்
மிக்ஸி, கிரைண்டர் வருகையால் அம்மி, ஆட்டுக்கல் எல்லாம் காணாமல் போய்விட்டன. அதே போன்று கம்ப்யூட்டர் வந்தபிறகு பேப்பர் பயன்பாடு குறைந்துள்ளது.

குண்டு
கம்ப்யூட்டர் மற்றும் அது சார்ந்த சேவைகள் இல்லாமல் மனிதர்களால் இருக்க முடியாது. ஏன் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது குண்டு வீசக் கூட கம்ப்யூட்டரை பயன்படுத்தும் அவலமும் உள்ளது.

குடும்பம்
இனி கூடி மகிழ்வது குடும்பங்களில் நடக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மொழி, பண்பாட்டுக்கு மிகப்பெரிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கை
பழையன கழிதலும், புதியன புகுதலும் தவிர்க்க முடியாதது தான் என்றாலும் அது மனித வாழ்க்கையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

தனிமை
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எழுத்தும், பேச்சும் குறைந்து மனிதர்களிடம் தனிமை தான் அதிகரித்துள்ளது. இதயமும் இதயமும் பேசினால் தான் இன்பம் பெருகும் என்பதை யாரும் மறக்கக் கூடாது என்றார் பாப்பையா.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications