தமிழ்நாட்டுக்கு சோனியா, ராகுல் காந்தி விரைவில் வருகை
சென்னை: தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு. தி.க. கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தமிழக காங்கிரஸ் கட்சியும் பிரசாரத்தை தொடங்க ஏற்பாடு செய்து வருகிறது,

39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேச 100 மேடை பேச்சாளர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர். பெருந்தலைவர் காமராஜர் செயல்படுத்திய திட்டங்கள், காமராஜர் பற்றிய சாலமன் பாப்பையா நடத்திய பட்டிமன்றம் ஆகியவை சி.டி.க்களாக தயாரிக்கப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல் படுத்திய திட்டங்கள் தமிழ் நாட்டுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள உதவிகள் என்ன, ஒதுக்கிய பணம் எத்தனை கோடி என்பது பற்றிய துண்டு பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவற்றை வீடு வீடாக வினியோகம் செய்கிறார்கள். பிரசாரத்தின்போது தங்களை விமர்சிக்கும் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கவும், ராஜீவ் கொலையாளிகள் பற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதில் கூறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி ஒவ்வொன்றுக்கும் 3 பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஒரே மாவட்டத்தில் சில தொகுதிகள் வந்தால் அதற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுகிறார்.
தொகுதி பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பெயர் பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். அவர்கள் எந்த ஊரில் பிரசாரம் செய்வது,அதற்கான பொதுக்கூட்டம் எந்த இடத்தில் நடைபெறும் என்பதை முடிவு செய்து தெரிவிக்கும்படி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது. சோனியா, ராகுல் பிரசாரம் செய்யும் இடங்களை தேர்வு செய்ததும் மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் அதை உறுதி செய்தபிறகு பிரசார தேதி முடிவாகும். ஏப்ரல் மாதம் 2 வது வாரத்தில் ராகுலும், 3 வது வாரத்தில் சோனியாவும் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications