டோல்கேட் கட்டண உயர்வுக்கு எதிராக தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் விரைவில் போராட்டம்
டோல்கேட் கட்டண உயர்வை எதிர்த்து விரைவில் தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்த உள்ளனர்.
சென்னை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுங்க கட்டணஉயர்வை எதிர்த்தும், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வரக் கோரியும் விரைவில் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 41 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளின் (டோல்கேட்) கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் 327 சுங்க சாவடிகள் உள்ளன. இதில் 117 சுங்கச்சாவடிகள் தென் மாநிலங்களில் உள்ளன. அவற்றில் 41 தமிழகத்தில் உள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சுங்க சாவடிகளின் மூலம் தேவையான பணம் வசூல் செய்த பிறகும் மத்திய அரசு கட்டணம் வசூலிப்பது நிறுத்தவில்லை. இதில் கொள்ளையடிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு துணை போகிறது.
ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி சாலை மூலம் சுங்க வரி வசூல் செய்யப்படுகிறது. இது தவிர்த்து லாரி, பஸ் போன்ற வாகனங்களுக்கு சாலை வரியும் வசூலிக்கப்படுகிறது. மேலும், எரிபொருட்களின் மீதும் வரி விதிக்கப்படுகிறது. இதனால் வாகன உரிமையாளர்களுக்கு அதிக இழப்பு ஏற்பட்டு வருகிறது.
ஒரு நாளைக்கு 300 கி.மீ., மேல் இயக்கமுடியாதபடி லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சுங்கவரியை ஆண்டுக்கு ஒரு முறை கொடுப்பதாகவும், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரக்கோரியும் பல முறை வலியுறுத்தியும் அதற்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
இதுவரை நாங்கள் அமைதியாக இருந்துவிட்டோம். இனியும் இந்த நிலை தொடர்ந்தால், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும், விரைவில் பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் கூட்டத்தில் பேசி அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்கவுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications