வேலூரில் 2 பேரை கொன்றுவிட்டு விருட்டென சென்ற கார்: 2 பேர் கைது
வேலூர்: வேலூரில் 2 பேர் மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் பிடித்து அதில் இருந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி நான்கு வழிசாலை வழியாக ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த கார் பங்கலாமோடு என்ற இடத்தை கடந்து செல்கையில் முன்னால் சென்ற சைக்கிள் மற்றும் பைக் மீது மோதியது. இதில் சைக்கிளில் சென்ற பொத்தப்பன், பைக்கில் சென்ற லிங்கப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஆனால் அந்த காரோ நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இதை பார்த்த பொதுமக்கள் சம்பவம் பற்றி நாட்றாம்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்து காரின் அடையாளங்களையும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடிக்கு போன் செய்து விபத்தை ஏற்படுத்திய காரின் அடையாளங்களை கூறி அதை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்தனர்.
போலீசார் தெரிவித்த அடையாளங்களுடன் வந்த காரை சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து அதில் இருந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் யார், எங்கு சென்றார்கள், எதற்காக விபத்தை ஏற்படுத்தியும் நிற்கவில்லை என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications