கொழும்பிலிருந்து வந்து சென்னையில் “ரிப்பேர்” ஆன இலங்கை விமானம் – பயணம் ரத்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் ஒன்று தரை இறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டதால் மறு மார்க்கத்தில் பயணம் ரத்தானது.
கொழும்பில் இருந்து சென்னைக்கு 122 பயணிகளுடன் "ஏர்லங்கா" விமானம் புறப்பட்டு வந்தது.
இந்த விமானம் இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் தரை இறக்கப்பட்டது. விமானத்தை ஓடு பாதையில் நிலை நிறுத்தி கொண்டு வந்த போது விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரிந்தது.
இதையடுத்து விமானத்தை சாமர்த்தியமாக விமானிகள் தரை இறக்கி பாதுகாப்பாக பயணிகளை கீழே இறக்கினர்.
சரியான நேரத்தில் தொழில் நுட்ப கோளாறை விமானிகள் கண்டு பிடித்து இறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 122 பயணிகளும் உயிர் தப்பினர். இதனால் அவ்விமானம் மீண்டும் கொழும்பு செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications