இலங்கை ராணுவம் தொடர் கெடுபிடி: மீண்டும் அகதிகள் தமிழகம் வருகை
Subscribe to Oneindia Tamil

இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 இலங்கை அகதிகள் இன்று தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினரிடம் அவர்கள் கூறும்போது, ''இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் நாங்கள் தமிழகம் வந்துள்ளோம். எங்களை போல், சுமார் 2 ஆயிரம் அகதிகள் மன்னார் காடுகளில் பதுங்கி இருக்கின்றனர்.
மேலும் இலங்கையில், விடுதலைப் புலிகள் இருப்பதாக கூறி தமிழர்களை இலங்கை ராணுவம் தொந்தரவு செய்து வருகின்றனர்" என்று அந்த அகதிகள் தெரிவித்ததாக கூறினர்.
இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக வருவது சமீப காலமாக குறைந்திருந்தது. இந்த நிலையில் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications