For Daily Alerts
Just In
ஆகாத மருமகளைப் போல் அரசு மீது குற்றம் சொல்கிறார் ஸ்டாலின்.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
ஆகாத மருமகளைப் போல் அரசு மீது ஸ்டாலின் குற்றம்சாட்டி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆகாத மருமகளைப் போல் அரசு மீது ஸ்டாலின் குற்றம்சாட்டி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அரசின் வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவது தவறு என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வெள்ள தடுப்புப் பணிகளில் அரசு போர் கால அடிப்படையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஸ்டாலின் பேசி வருவதாக அவர் கூறினார். ஆகாத மருமகள் கைப் பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போலவே ஸ்டாலின் பேசுகிறார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
ஸ்டாலின் பத்திரிக்கைகளில் வரவேண்டும் டிவி சேனல்களுக்கு போஸ் தரவேண்டும் என்றே அவ்வாறு பேசி வருவதாகவும் அவர் கூறினார். திமுக ஆட்சியில் வெள்ளப்பணிகள் எப்படி எஇருந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Comments
English summary
Minister sellur raju said Stalin accusing like mother in law on dourhter in law. He said govt taking wartime action on the chennai flood.
Story first published: Friday, November 3, 2017, 17:02 [IST]