அரசு பணத்தில் நடக்கும் கூட்டத்தில் திமுகவை விமர்சிப்பது ஏன்? ஸ்டாலின் நறுக்!
அரசு பணத்தில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை விமர்சிப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: அரசு பணத்தில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
திமுகவை விமர்சிப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு விழாவில் திமுகவை விமர்சிப்பதாக முதல்வர் எடப்பாடிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அரசு பணத்தில் நடக்கும் கூட்டத்தில் திமுகவை விமர்சிப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ளார். திமுகவை திட்ட அரசு பணத்தை ஒதுக்கும் தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழநாட்டில் கொலை, கொள்ளைகள் எங்கு பார்த்தாலும் நடக்கின்றன என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்கு அதிமுக ஆட்சியில் உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு வழிகாட்ட நோர்மையான டி.ஜி.பி இல்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் இருந்து தலைமை செயலர், டிஜி.பி விலக வேண்டும் என தனது அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.