ஸ்டாலின் 'அங்கிள்' என்னை அடிக்கவேயில்லை.. மெட்ரோ ரயிலில் சர்ச்சையில் சிக்கிய நபர் விளக்கம்..
சென்னை : மெட்ரோ ரயிலில் பயணித்தபோது, தன்னை மு.க.ஸ்டாலின் அடிக்கவில்லை என்று சர்ச்சைக்குள்ளாகிய இளைஞர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன் கிழமை மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த போது சக பயணி ஒருவரை அறைந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த காட்சிகள் ஊடகங்களிலும் வெளியானது.

இது குறித்து கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு எம்.எல்.ஏ. இப்படியா நடந்துகொள்வது என்று கூறியிருந்தார். எதிர்காலத்தில் ஸ்டாலின் இது போன்று மீண்டும் நடந்து கொள்ளமாட்டார் என்று நம்புவதாகவும் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான சென்னை மடுவங்கரையைச் சேர்ந்த கார்த்திக் ராஜேந்திரன் என்ற அந்த இளைஞர், தன்னை ஸ்டாலின் அடிக்கவில்லை என்றும், அமந்திருந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுக்காமல் நகர்ந்து கொள்ளுமாறு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

தங்கள் குடும்பம் தி.மு.க. ஆதரவு குடும்பம் என்றும், ஸ்டாலின் தனது ரோல் மாடல் என்றும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது தான் மது அருந்தியிருந்ததாக வெளியான தகவலையும் அந்த இளைஞர் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications