கொளத்தூர் தொகுதியில் டெங்கு நோயாளிகளுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் ஆறுதல்!
தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை : கொளத்தூர் தொகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதித்தவர்களை சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து அவர்களுக்கு போதமான வசதிகள் உள்ளனவா என்று ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.

சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்
காலை 9.30 மணிக்கு செம்பியம் வந்த ஸ்டாலின் அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை வார்டு வார்டாக சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சிகிச்சை முறைகள் குறித்தும் மருந்துகள் தாராளமாக கிடைக்கிறதா என்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

உடல்நலன் தேற ஆறுதல்
பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமியர் ஆகியோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் பந்தர் கார்டன் பகுதிக்கு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நலன் விசாரித்த ஸ்டாலின்
இதனைத் தொடர்ந்து அகரம் சோலையராஜா தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழம் அளித்தும் ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறு குழந்தைகள் விரைவில் உடல்நலன் பெற்று வீடு திரும்ப வாழ்த்துகளையும் ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்தார்.

400 பேர் உயிரிழப்பு என தகவல்
தமிழகத்தில் டெங்கு நோய் பாதிப்பு குறித்து பொய்யான தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் கூறி வருவதாக ஸ்டாலின் இந்த ஆய்விற்குப் பின்னர் அளித்த பேட்டியில் தெரிவித்தார். தமிழகத்தில் டெங்குவிற்கு நாள் ஒன்றிற்கு 10 பேர் உயிரிழப்பதாகவும், இதுவரை 400 பேர் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications