ஜெ. பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு பின்வரிசையில் சீட் கொடுத்தது எதிர்பார்த்தது தானே: அன்புமணி
சென்னை: ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கியது எதிர்பார்த்தது தான் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா 6வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் தான் வேண்டும் என்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் திமுகவையோ, ஸ்டாலினையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.
இது குறித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற விழாவில் ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கியது எதிர்பார்த்தது தான். தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.











Click it and Unblock the Notifications