திமுகவினர் முகத்தில் தார் பூசச் சொன்ன பொன்னார்... அவர் தமிழன்தானே என்ற ஸ்டாலின்
திமுகவினர் முகத்தில் மை பூசுங்கள் என்று கூறிய பொன் ராதாகிருஷ்ணன் தமிழன்தானே என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
சென்னை: நெடுஞ்சாலை மைல் கற்களில் மை பூசுவதற்குப் பதிலாக, திமுகவினர் தங்கள் முகத்திலேயே கருப்பு மை பூசிக் கொள்ளட்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின், மத்திய அமைச்சராக உள்ள அவர் தமிழன்தானா என்று கேள்வி எழுப்பினார்.
நெடுஞ்சாலைகளில் மைல் கற்களில் ஹிந்தியில் எழுதப்படுவதற்கு பல அரசியல் கட்சியனர் கண்டனம் தெரிவித்தனர். திமுகவினர் போராட்டம் நடத்த வேண்டுமா? என்று கேட்ட ஸ்டாலின், மை பூசி அழிப்போம் என்று கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலையிலுள்ள மைல் கற்களில் ஹிந்தியில் பெயர் எழுதுமாறு உத்தரவிட்டதே திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுதான். எனவே நெடுஞ்சாலை மைல் கற்களில் மை பூசுவதற்குப் பதிலாக, திமுகவினர் தங்கள் முகத்திலேயே கருப்பு மை பூசிக் கொள்ளட்டும் என்றார்.
இந்த கருத்துக்கு கோவை விமான நிலையத்திற்கு வந்த ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், மத்திய அமைச்சராக இருந்தாலும் அவர் தமிழன்தானே என்று கேட்டார்.
இதற்கு பொன். ராதாகிருஷ்ணன் என்ன பதில் சொல்லப்போகிறாரோ?












Click it and Unblock the Notifications