தூத்துக்குடி கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்..சிகிச்சைப் பலனின்றி பெண் பலி

தூத்துக்குடி அருகே கருங்குளத்தில் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தூத்துக்குடி கலவரத்திற்கு திமுக மீது குற்றச்சாட்டு கூறியுள்ள முதல்வர் பழனிச்சாமி -வீடியோ

    தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    தூத்துக்குடியில் கடந்த 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    Strangers set up fire to govt bus in Tuticorin on May 25th: woman dead today

    இதில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக தொடர்ந்து 3 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வந்தது.

    இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். உடன்குடியில் இருந்து நெல்லை செல்லம் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் 3 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களில் வள்ளியம்மாள் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 2 பேருக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+