காசு இல்லாததாலதானே அரசுப் பள்ளியில் படிக்கிறோம்.. இசபெல்லா மாற்றத்தை எதிர்க்கும் மாணவர்கள் குரல்!
காசு இல்லாததால் தானே நாங்கள் அரசு பள்ளியில் படிக்கிறோம் என இசபெல்லா ஜூலி டீச்சரின் மாற்றத்தை மாணவர்கள் எதிர்க்கின்றனர்.
நாகை: காசு இல்லாததால் தானே நாங்கள் அரசு பள்ளியில் படிக்கிறோம். நல்லா சொல்லி கொடுக்கும் டீச்சரை மாற்றினால் நாங்கள் எப்படி படிப்பது என்று மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில் 1939-ஆம் ஆண்டிலிருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இங்கு பணியாற்றி வரும் இசபெல்லா ஜூலியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வி அலுவலகம் உத்தரவிட்டது.

பாச பிணைப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் டீச்சரை கட்டிக் கொண்டு அழுதது காண்போரை நெகிழ வைத்தது. இசபெல்லா டீச்சரை இடமாற்றம் செய்யக் கூடாது என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றாக பாடம் நடத்தும் டீச்சர்
இதுகுறித்து அந்த மாணவர்கள் கூறுகையில், மாணவர்கள் குறைந்த நிலையில் இருக்கும் போதும் இசபெல்லா ஜூலி டீச்சர் நன்றாக சொல்லிக் கொடுக்கிறார். அதனால்தான் நாங்கள் படிக்கிறோம். தற்போது டீச்சரை குறைத்தால் நாங்கள் எப்படி படிப்பது.

பாடம் நடத்தும் ஆசிரியர்
எங்கள் பெற்றோரிடம் பண வசதி இல்லாததால் நாங்கள் அரசு பள்ளியில் படிக்கிறோம் என்றனர். இதுகுறித்து பெற்றோர் கூறுகையில் ஆட்குறைப்பு என்ற பெயரில் ஆசிரியரை இடமாற்றம் செய்கின்றனர். இந்த ஆசிரியர் நன்றாக பாடம் நடத்துகிறார்.

டீச்சரை மாற்றாதே
அவரை மாற்றக் கூடாது. தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதற்காகவே அரசு இதுபோன்ற இடமாற்றத்தை செய்கிறது என்றனர். இதையடுத்து மாற்றாதே மாற்றாதே எங்கள் டீச்சரை மாற்றாதே ... என மாணவர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications