For Daily Alerts
Just In
பேருந்தின் மேற்கூரை மேல் ஏறி மாணவர்கள் கலாட்டா- சென்னையில் அட்டகாசம்.. போலீசில் புகார்
சென்னை: சென்னையில் அரசுப் பேருந்தின் கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்ததை அடுத்து அவர்கள் மீது போலீசில் ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.
சென்னை அருகே ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி வந்துகொண்டு இருந்த 40 A பேருந்தின் கூரை மீது ஏரி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் கீழே இறங்க சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மாணவர்கள் தொந்தரவு செய்து வந்ததால் ஓட்டுனர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி புகார் செய்தார்.
பின்னர் காவல்துறையினர் மாணவர்களை கீழே இறங்க சொல்லி பேருந்தினுள் ஏற்றி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
English summary
Students climbed on a bus top and fight with bus driver. Police solved the problem and compromise both driver and students.
Story first published: Thursday, June 18, 2015, 13:35 [IST]