For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொல்லாமல் ட்ரெக்கிங் சென்ற சுபா.. திரும்பாமலே போயிவிட்டார்.. கதறியழுத குடும்பத்தினர்!

குரங்கணிமலை காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த திட்டக்குடி சுபா தனது குடும்பத்தினரிடம் சொல்லாமல் ட்ரெக்கிங் சென்றது தெரியவந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வீட்டில் சொல்லாமல் ட்ரெக்கிங் சென்ற சுபா... உயிரற்றே திரும்பி வந்தார்...

    கடலூர்: குரங்கணிமலை காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த திட்டக்குடி சுபா தனது குடும்பத்தினரிடம் சொல்லாமல் ட்ரெக்கிங் சென்றது தெரியவந்துள்ளது.

    தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு 36 பேர் வரை சென்றனர். அவர்களுள் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். நேற்றைய தினம் அங்கு காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்தது.

    இந்த தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின், சுபா ஆகிய 7 பேரும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச் செல்வி ஆகிய 3 பேரும் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

    திட்டக்குடி சுபா

    திட்டக்குடி சுபா

    தீவிபத்தில் பலியானவர்களில் சுபா என்ற பெண் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. சுபாவின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் திட்டக்குடியாகும்.

    சுபா உயிரிழப்பு

    சுபா உயிரிழப்பு

    இவரது தந்தை பெயர் செல்வராஜ். சுபாவுக்கு கமல்ராஜ் என்ற சகோதரரும் உள்ளார். சுபா உயிரிழந்தது பற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்கு இன்று காலையில்தான் தெரிய வந்தது.

    ஊரே திரண்டு கதறியது

    ஊரே திரண்டு கதறியது

    இதனைக் கேட்டதும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறினர். இன்று மாலை சுபா உடல் திட்டக்குடி வந்தது. அப்போது ஊரே திரண்டு நின்று கதறி அழுதனர்.

    தவித்த சகோதரர்

    தவித்த சகோதரர்

    சுபாவின் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் கமல்ராஜை கேட்டபோது எதுவும் பேச முடியாமல் தவித்தார். பின்னர் அழுதபடியே அவர் கூறும்போது, எப்படி யார் மூலமாக எனது சகோதரி சென்றார் என்பதே தெரியவில்லை என்று கதறினார்.

    தோழிகளுடன் ட்ரெக்கிங்

    தோழிகளுடன் ட்ரெக்கிங்

    தொடர்ந்து பேச முடியாமல் அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை துயரத்தில் ஆழ்த்தியது. மலையேற்ற பயிற்சியில் ஆர்வம் கொண்ட சுபா தனது தோழிகள் சிலருடன் தேனி மலைப் பகுதிக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

    English summary
    Cuddalore Subha who died in the forest fire is belongs to Cuddalore Thittakudi. Subha had gone for trekking eithout intimating her family.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X