ஐடி இருந்தால்தான் ரஜினியைப் பார்க்க முடியுமாம்.. ரொம்ப ஓவரா இருக்கே!
ரஜினி ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டும்தான் நடிகர் ரஜினியுடன் நாளை போட்டோ எடுத்துக்கொள்ள முடியும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் நாளை போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் வருடத்துக்கு ஒருமுறை தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த சில வருடங்களாக இந்த சந்திப்புகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் 2.ஓ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்றும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து அவருக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கடிதங்கள் எழுதினார்கள். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த மாதம் ரசிகர்களைச் சந்திக்க ரஜினிகாந்த் முடிவு செய்தார்.

தனித் தனியாக போட்டோ
ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்வது சாத்தியமில்லை என்பதால், அந்தச் சந்திப்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சி தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

10 மாவட்ட ரசிகர் மன்றப் பிரதிநிதிகள்
தற்போது, முதல் கட்டமாக 10 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்து இருக்கிறார். அதன்படி, முதலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், தஞ்சை, கரூர் ஆகிய 10 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்கிறார்.

ராகவேந்திரா கல்யாண மண்டபம்
இந்த சந்திப்பு, சென்னை கோடம்பாக்கம் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து 16, 17, 18, 19 ஆகிய தேதிகளில், அதே ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் நேரில் சந்திக்கிறார். நாளை முதல் 19-ம் தேதி வரை, தொடர்ந்து 5 நாட்கள் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

கண்டிப்பான உத்தரவு
இது தொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்புடன் ஒத்துழைக்கவும் என்று தெரிவித்துள்ளார்.
ரொம்ப ஓவரா இருக்கே!
-
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
ரஜினி பற்றி ஆதவ் சொன்ன கருத்து.. லதா ரஜினிகாந்த் கொடுத்த தக் லைஃப் பதில்.. குவியும் கமெண்ட்ஸ் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?











Click it and Unblock the Notifications