சுட்டெரிக்கும் வெயிலுக்கு டாடா...4 நாட்களுக்கு பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கப்போகும் கனமழை
சென்னை: தமிழ்நாட்டில் பல ஊர்களில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ள நிலையில் அனல் காற்று வீசியது. வெப்பம் தணிய இன்றைய தினம் நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோடை காலம் தொடங்கியதில் இருந்தே ஈரோடு மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. பல நாட்கள் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. எப்போதுமே ஜில்லென்று இருக்கும் கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. கடந்த சில நாட்களாக கோவை, தேனியில் கோடை மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்தது.

இந்த வானிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழைக்கு பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இன்று ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தொடர்ந்து, ஏப்ரல் 30 ஆம் தேதி, அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மே 1 ஆம் தேதி, பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மே 2 ஆம் தேதி, பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாட்டி வதைத்த வெப்பத்திற்கு இதமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அனல் காற்றில் இருந்து தப்பித்தோம் என மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications