For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர் நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின்போது உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை மே 1ம் தேதி முதல் தொடங்குகிறது. மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Summer Holidays for High Court

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் டி.ரவீந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மே 1 முதல் மே 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையில், 4 பகுதிகளாக விடுமுறைக் கால நீதிமன்றம் செயல்படும். வாரந்தோறும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வழக்கு தாக்கல் செய்யலாம். புதன், வியாழக்கிழமைகளில் உயர்நீதிமன்றம் செயல்படும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் பகுதி விடுமுறைக் கால நீதிபதிகளாக கே.கே.சசிதரன், எஸ்.விமலா, பி.கலையரசனும், 2-ஆவது பகுதி நீதிபதிகளாக என்.கிருபாகரன், எம்.வி.முரளிதரன், வி.பாரதிதாசனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று, 3-ஆவது பகுதி நீதிபதிகளாக கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணகுமார், ஆர்.மகாதேவனும், 4-ஆவது பகுதி நீதிபதிகளாக எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை கிளையில், விடுமுறை கால முதல் பகுதி நீதிபதிகளாக டி.எஸ்.சிவஞானம், பி.என்.பிரகாசும், 2-ஆவது பகுதி நீதிபதிகளாக ஜி.சொக்கலிங்கம், பி.கலையரசனும், 3-ஆவது பகுதி நீதிபதிகளாக எம்.வி.முரளிதரன், பி.கோகுல்தாசும், 4-ஆவது பகுதி நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Summer Holidays for the Madras High Court and Madurai Bench
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X