இரவில் குறையும் பனி.. பகலில் தலை தூக்கும் வெயில்.. நெல்லையில் மக்கள் அவதி

நெல்லையில் இரவில் பனி குறைந்தும், பகலில் வெயில் அதிகரித்தும் வருகிறது. இயற்கையின் இந்த மாற்றத்தால் நெல்லை வாழ் மக்கள் நோய் தொந்தரவுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை பகுதியில் பகல் பொழுதில் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இரவில் பனி பொழிவு இருந்து வருகிறது. அதே வேளையில் பகலில் வெயிலும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நெல்லையில் 97 டிகிரி வெப்பம் பதிவாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் நெல்லை, தூத்தக்குடி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பல்வேறு இடங்களில் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

Summer starts in Tirunelveli

இந்நிலையில் இரவில் பனி பொழிவு கொஞ்சம் குறைந்து காணப்படுகிறது. கோடை துவங்கும் முன்பே வெயில் அதிகரித்து வெளுத்து வாங்குவதால் பொதுமக்கள் மதிய வேளையில் சாலையில் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வெப்பம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெல்லையில் 97 டிகிரி வெப்பத்தால் சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. அதே நேரத்தில் அதிகாலையில் தோன்றும் பனியின் அளவு குறைந்து வருகிறது. இந்த பனி, இனி வரும் நாட்களில் முற்றிலும் குறைந்து நின்று, வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தற்போது தொடங்கியுள்ள கோடை வெயில் வரும் ஜீன் மாதம் வரை நீடிக்கும் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+