சன் டிவி விற்பனைக்கல்ல...!
சென்னை: கலாநிதிமாறனின் சன்டிவி நெட்ஒர்க் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று மறுப்பு வெளியிட்டுள்ளார் சன்டிவி குழும சி.எப்.ஓ எஸ்.எல்.நாராயணன்.
தென்னிந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி குழுமத்தையே ஒட்டு மொத்தமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்க உள்ளதாக தெஹல்கா இணையதளம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.

இதனால் பரபரப்படைந்த நிறுவனத்தின் சி.எப்.ஓ நாராயணன், சன் சன்டிவி நெட் ஒர்க் விற்பனை செய்யப்பட்டதாக வந்த தகவல், பொய்யானது என்று ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது போன்ற ஒரு வதந்தி எப்படி வெளியானது என்றே தெரியவில்லை. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். இதுபற்றி எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இதுபோன்ற ஒரு தகவலை வெளியிடும் முன் எங்களிடம் விசாரித்து எழுதியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் சொல்வது என்ன?
இந்த தகவலை ரிலையன்ஸ் நிறுவனமும் மறுத்துள்ளது. மார்ச் 20ம் தேதி வெளியான தெஹல்கா இதழில், சன்டிவி நிறுவனத்தினை ரிலையன்ஸ் வாங்கப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விற்பனை செய்தி தொடர்பாக மும்பை பங்குச் சந்தையிலிருந்து ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு தகவல் போனது. அதற்கு ரிலையன்ஸ் பதில் அளித்துள்ளது. அதி்ல், டெஹல்கா இணையதளத்தில் வந்துள்ள செய்தி போல எதுவும் நடக்கவில்லை. அந்த செய்தியில் உண்மை இல்லை. இந்த செய்தியை எழுதிய செய்தியாளர் அதுகுறித்த விவரங்களை எங்களிடம் கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications