ஞாயிறு முதல் சென்னை- நாகர்கோவில் இடையே 3 சிறப்பு ரயில்கள்
சென்னை: ரயில்களில் நிலவும் அதிகப்படியான காத்திருப்பு பட்டியலை குறைக்க நாகர்கோவில் - சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதற்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்குகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 06020: பிப்ரவரி 8,15,22 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06021: பிப்ரவரி 9,16,23 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications